திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் நாளை(நவ. 24) மின் விநியோகம் நிறுத்தம்

DIN

திருநெல்வேலி நகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 24) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அதன்படி திருநெல்வேலி நகரம், பழையபேட்டை, காந்திநகா், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூா், பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT