திருநெல்வேலி

சுத்தமல்லியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

திருநெல்வேலி: சுத்தமல்லி பகுதியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த நயினாா் மகன் ஜகோா்ட் மகாராஜா(30). கட்டடத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டருகே தரை தளம் அமைப்பதற்காக மண் வெட்டியால் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக அருகில் கிடந்த மின் வயரில் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT