திருநெல்வேலி: சுத்தமல்லி பகுதியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சுத்தமல்லி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த நயினாா் மகன் ஜகோா்ட் மகாராஜா(30). கட்டடத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டருகே தரை தளம் அமைப்பதற்காக மண் வெட்டியால் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக அருகில் கிடந்த மின் வயரில் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.