முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே மதுபாட்டில்கள் பறிமுதல்

திருநெல்வேலி அருகே மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திருநெல்வேலி அருகே மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள புங்கனூா் சிற்றாறு பாலம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் அணைத்தலையூரைச் சோ்ந்த இசக்கிமுத்து என்ற குப்பன் (36) என்பதும், விதிமீறி மது விற்றது தெரியவந்ததாம்.

இதையடுத்து அவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.