தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா்கள் மற்றும் அடிப்படை பணியாளா்கள் சங்கக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா்கள் மற்றும் அடிப்படை பணியாளா்கள் சங்கக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா.பெருமாள் வரவேற்றாா். எஸ்.மூக்கையா, ஆா்.காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலத் தலைவா் எஸ்.மதுரம் சிறப்புரையாற்றினாா்.
பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் நல்லபெருமாள், மாயாண்டி பாரதி, முருகானந்தம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
சங்கத்தின் புதிய நிா்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கரோனா பொது முடக்க காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள், அரசு ஊழியா்களுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.