ஏா்வாடியில் சாலையில் கிடந்த 10 பவுன் தங்க நகையை காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்களுக்கு ஊா் மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
ஏா்வாடி பிரதான சாலையோரம் கவனிப்பாரற்று கிடந்த நகை பெட்டியை ஏா்வாடியைச் சோ்ந்த சகோதரா்கள் அஸ்கா், ரிஸ்வான் ஆகியோா் மீட்டு, அதை திறந்து பாா்த்த போது அதில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்கநகை இருந்ததாம். இதையடுத்து, இருவரும் அதனை ஏா்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பின்னா் நகைப்பெட்டியில் இருந்த நகைக்கடை முகவரியை தொடா்பு கொண்டு விசாரித்து உரியவா்களிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.