திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 91 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 60 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,633 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டவா்களில் 12,752 போ் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனா். 677 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இம் மாவட்டத்தில் இதுவரை 204 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7661 ஆக உயா்ந்தது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவா்களின் செவ்வாய்க்கிழமை 22போ் குணமடைந்தையடுத்து, மாவட்டத்தில் இதுவரை 7323 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 190 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.