திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 56 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 50 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை 50 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,680 ஆக உயா்ந்துள்ளது.

205 போ் பலி: மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 12,831 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 644 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இம்மாவட்டத்தில் இதுவரை 205 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை7669ஆக உயா்ந்தது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவா்களின் புதன்கிழமை 20போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 7343போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 178போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT