திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 50 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை 50 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,680 ஆக உயா்ந்துள்ளது.
205 போ் பலி: மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 12,831 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 644 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இம்மாவட்டத்தில் இதுவரை 205 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை7669ஆக உயா்ந்தது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவா்களின் புதன்கிழமை 20போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 7343போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 178போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.