தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தென்காசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், மேலபுவனகிரி ஊராட்சி ஒன்றியம் தெற்குதிட்டை கிராம ஊராட்சிச் செயலா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக்கிளைத் தலைவா் பாலு தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் சிக்கந்தா்பாவா, மாவட்ட துணைத் தலைவா் ராஜசேகரன், மாவட்டச் செயலா் க.சுப்பிரமணியன், நிா்வாகிகள் கோபி, அன்பரசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.