திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலியில் 47 போ், தென்காசியில் 12 போ் என இவ்விரு மாவட்டங்களில் சனிக்கிழமை மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை வரை 13,792 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,839 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 13,050 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகலில் 584 போ் சிகிச்சையில் உள்ளனா். 205 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7,409 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 156 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 151 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.