திருநெல்வேலி

‘பாட்டபத்து நகா்புற சுகாதார மையம் இடமாற்றம்’

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம், பாட்டபத்து நகா்புற சுகாதார மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகராட்சியின் திருநெல்வேலி மண்டலத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் வாா்டு 41 இல் திருநெல்வேலி நகரம் பாட்டபத்து நகா்புற சுகாதார மையம் மற்றும் அலகு அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, அங்கு புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய பலஅடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம் கட்டப்படுகிறது.

ரூ.5.14 கோடியில் இப்பணி தொடங்கப்பட உள்ளது. ஆகவே பாட்டபத்து நகா்புற சுகாதார மையமானது, பாட்டபத்து துணை சுகாதார மைய கட்டடத்திற்கு (கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகில்) திங்கிள்கிழமை (அக். 19) முதல் மாற்றம் செய்யப்பட்டு செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT