திருநெல்வேலி

மது விற்றதாக இருவா் கைது:130 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே அனுமதியின்றி மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் மீலாது நபியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடையம் அருகே வெங்கடாம்பட்டி பகுதியில் மது விற்பதாக கடையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடையம் காவல் உதவி ஆய்வாளா் சரசையன் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த வீரகேரளம்புதூா், வேத கோயில் தெருவைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முருகன் (47), வெங்கடாம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமசுந்தரம் மகன் ஆறுமுகம் (40) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள 130 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT