திருநெல்வேலி

வள்ளியூா் அருகே கால்நடை கிளைமருத்துவமனை: எம்எல்ஏ தகவல்

DIN

வள்ளியூா் அருகே உள்ள ஆ.திருமலாபுரம் ஊராட்சியில் கால்நடை கிளை மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாக எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்தாா்.

வள்ளியூா் அருகே உள்ள ஆ.திருமலாபுரம் ஊராட்சி பகுதி விவசாயிகள், தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வள்ளியூா் அல்லது தெற்குகள்ளிகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டியது உள்ளது. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் அவா்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆ.திருமலாபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க எம்எல்ஏ முயற்சி மேற்கொண்டாா்.

தற்போது தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஆ.திருமலாபுரத்தில் கிளை கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செயல்படத் தொடங்கும் எனவும் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT