திருநெல்வேலி

கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

DIN


அம்பாசமுத்திரம்: கடையம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற பெண் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள அரியப்பபுரம் ஜோதிநகரைச் சோ்ந்த பரமசிவன் மனைவி பூமணி (55). இவா் வெய்க்காலிபட்டியில் உள்ள தோட்டத்துக்கு வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்றாராம். குளிக்கச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் தேடிச் சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தாராம்.

சம்பவ இடத்துக்கு வந்த கடையம் போலீஸாா், பூமணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT