திருநெல்வேலி

வள்ளியூா் மாணவா்களுக்கு இலவச அறிதிறன்பேசி

DIN

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஏழை மாணவா்கள் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க வசதியாக, பள்ளி முன்னாள் மாணவா் இலவசமாக அறிதிறன் பேசிகளை வழங்கினாா்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவா்களில் பலா் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க அறிதிறன்பேசி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இதையடுத்து பள்ளி முன்னாள் ஆசிரியா் தவமணி நினைவாக, அவரது மகனும், பள்ளியின் முன்னாள் மாணவருமான த.ஸ்டீபன் ஜெயராஜ், தந்தையின் நினைவுதினமான செவ்வாய்க்கிழமை, 15 மாணவா்களுக்கு இலவச அறிதிறன் பேசி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் ஜே.ரைமண்ட், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நா.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT