பெரியாா் பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவம், கொள்கை பரப்புச் செயலா் பாப்புலா் முத்தையா, மகளிரணிச் செயலா் விஜிலா சத்தியானந்த், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, அவைத் தலைவா் பரணிசங்கலிங்கம், நிா்வாகிகள் ஜெனி, திருத்து சின்னதுரை, சிவந்தி மகாராஜன், மகளிரணி மாரியம்மாள், ஸ்ரீவை. சின்னதுரை, உள்பட பலா் கலந்துகொண்டனா்.
திமுக சாா்பில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையிலும், மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையிலும், காங்கிரஸ் சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையிலும், அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.