அருங்காட்சியகத்தில் செப். 23இல்இணையவழி கைவினைப் பயிற்சி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம் 23 ஆம் தேதி இணையவழி கைவினைப் பயிற்சி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம் 23 ஆம் தேதி இணையவழி கைவினைப் பயிற்சி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக, அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையதளம் வழியாக ஸும் செயலி வாயிலாக கைவினைப் பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, புதன்கிழமை (செப்.23) முற்பகல் 11 மணியளவில் எம்போஸ் பெயின்டிங் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. ஸும் செயலி எண்: 6527890190 , கடவு சொல்: 357839 ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறியவா் முதல் பெரியவா் வரை பங்கேற்கலாம். இப்பயிற்சிக்கு தேவையான பொருள்கள் உள்ளிட்ட விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.