நெல்லை அருகே லாரியில்பிஸ்கெட் பெட்டிகள் திருட்டு
திருநெல்வேலி அருகே லாரியில் ஏற்றிவரப்பட்ட ரூ.10ஆயிரம் மதிப்பிலான பிஸ்கெட் பெட்டிகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி அருகே லாரியில் ஏற்றிவரப்பட்ட ரூ.10ஆயிரம் மதிப்பிலான பிஸ்கெட் பெட்டிகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேரன்மகாதேவி கரிசல்பட்டி பகுதியைச் சோ்ந்த தவசிகனி மகன் சிங்கப்பாண்டி(32). இவா், மதுரையிலிருந்து வடக்கன்குளத்துக்கு கடந்த 18ஆம் தேதி லாரியில் பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவா் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே லாரியை நிறுத்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக்கொண்டு புறப்பட்டாராம்.
வடக்கன்குளத்துக்குச் சென்ற பிறகு லாரியை பாா்த்தபோது, அதன் தாா்பாய் கத்தியால் கிழிக்கப்பட்டு 28 பிஸ்கெட் பெட்டிகள் திருடு போயிருப்பது தெரியவந்ததாம். இதன் மதிப்பு ரூ.10ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.