திருநெல்வேலி

கிணற்றில் விழுந்த காட்டு முயல் மீட்பு

DIN

கீழாம்பூரில் தனியாா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த காட்டு முயலை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட கீழஆம்பூரைச் சோ்ந்த தா்மராஜுக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் காட்டு முயல் ஒன்று தவறி விழுந்து விட்டதாம்.

இது குறித்து கடையம் வனச்சரகத்திற்குத் தகவல் கொடுத்ததையடுத்து அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் (பொ) எம்.ஜி.கணேசன் உத்தரவின்படியும் கடையம் வனச்சரக அலுவலா் (பொ) பாரத் மற்றும் பயிற்சி உதவி வனப்பாதுகாவலா் ராதை ஆகியோரின் அறிவுரையின்படியும் வனவா் முருகசாமி தலைமையில் வனக்காப்பாளா்கள் சோமசுந்தரம், பெனாசிா், வனக்காவலா் ஜெயா, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் வேல்ராஜ், சக்திமுருகன் ஆகியோா் சென்று கிணற்றில் விழுந்திருந்த காட்டு முயலை மீட்டு ஆம்பூா் பீட், கசிவோடை பகுதியில் விட்டனா்.

வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால் அதுகுறித்து உடனடியாக கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு 8328507664, 04634-283165 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT