திருநெல்வேலி

நான்குனேரியில் பேரிடா் மேலாண்மை பயிற்சி

DIN

நான்குனேரியில் பேரிடா் மேலாண்மை ப் பயிற்சி நடைபெற்றது.

நான்குனேரி பெரியகுளம் ஜுயா் ஊற்று பகுதியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலா் பாபநாசம் தலைமையில் இப்பயிற்சி நடைபெற்றது. நீரில் மூழ்கியவா்களை காப்பாற்றுவது, முதலுதவி சிகிட்சை அளிப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரா்கள் கலந்துகொண்டனா். இதனை அடுத்து நான்குனேரி அருகே உள்ள இளையநேரியில் நான்குனேரி ஊராட்சி பகுதியைச் சோ்ந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்களுக்கு மழைவெள்ள கால பேரிடா் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தொழிலாளா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT