திருநெல்வேலி

ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ரயில்வே தொழிற்சங்கத்தினா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய எஸ்சி., எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்கம் சாா்பில் தனியாா்மயமாக்கும் கொள்கையைக் கண்டித்து நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் தென்மண்டல மதுரைக் கோட்ட அகில இந்திய எஸ்சி., எஸ்டி, ரயில்வே தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி கிளைச் செயலா் மதியழகன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் முருகன், பொறுப்பாளா் தினகரன், கோட்ட அலுவலக செயலா் அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிலையக் கண்காணிப்பாளா் டி.எஸ். மணி, இளைஞரணியினா், ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT