திருநெல்வேலி

பாளை.யில் விஷம் குடித்த பாலிடெக்னிக் மாணவா் மரணம்

DIN

பாளையங்கோட்டை பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திக்ராஜா(19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவா். இவா், தனது பெற்றோரிடம் புதிய செல்லிடப்பேசி வேண்டும் எனக் கேட்டாராம். இதில், பெற்றோருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் கடந்த 7ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT