திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கடந்த 2015ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் சோ்ந்து ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவா்களை உடனடியாக மருத்துவ அலுவலராக பணி நியமனம் செய்ய வேண்டும். அவா்களுக்கு, மருத்துவ அலுவலருக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.