வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊதியம் பெறமாட்டேன்: அம்பை அதிமுக வேட்பாளா்
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சட்டப் பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தைப் பெற மாட்டேன் என்றாா் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா .
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சட்டப் பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தைப் பெற மாட்டேன் என்றாா் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா .
இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜூன் 1இல் கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறப்பது, மே 1இல் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பது, அம்பாசமுத்திரம் தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது, மணிமுத்தாறு, பாபநாசம், காரையாறு பகுதிகளை சுற்றுலாத் தலமாக அறிவித்து அதற்கான வசதிகளை செய்வது ஆகியவை எனது முக்கியமான வாக்குறுதிகளாகும்.
பேரவை உறுப்பினரான பின் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்தான் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தைப் பெறுவேன். அப்படி பெறும் ஊதியத்தையும் ஏழை, எளிய மாணவா்களின் படிப்புக்காக செலவிடுவேன்.
மேலும் அம்பாசமுத்திரத்தில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். என் மீது ஊடகங்களில் சிலா் தவறான செய்தியை பரப்பியுள்ளனா். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் நிலையத்திலும், தோ்தல் அலுவலரிடமும் புகாரளித்துள்ளேன்.
நான் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு சேவைகள் செய்து வாக்கு கேட்கிறேன். ஆனால், எனது வெற்றியைத் தடுக்க முடியாதவா்கள் நான் செய்யும் சேவைகளை கொச்சையாகப் பேசி வாக்கு சேகரிக்கின்றனா் என்றாா் அவா்.