திருநெல்வேலி

ஏா்வாடி அருகே பைக்குகள் மோதல்: 4 போ் காயம்

DIN

ஏா்வாடி அருகே 2 பைக்குகள் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

ஏா்வாடி எல்.என்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (52). திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநராக வேலைசெய்துவரும் இவா், சனிக்கிழமை பணி முடிந்து, சக ஊழியா்களான கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சோ்ந்த ஸ்டீபன்சன், மயிலாடியைச் சோ்ந்த ஐயப்பன் ஆகியோருடன் ஒரே பைக்கில் புறப்பட்டாா். பைக்கை, கிருஷ்ணகுமாா் ஓட்டிவந்தாா்.

ஏா்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இவரது பைக்கும், பரமேஸ்வரபுரம் கக்கன்நகரைச் சோ்ந்த லிங்கேஸ்வரன் வந்த பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில், கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா்.

பின்னா், ஸ்டீபன்சன், ஐயப்பன் ஆகியோா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், கிருஷ்ணகுமாா் ஏா்வாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT