திருநெல்வேலி

ஏா்வாடி அருகே மோதல்: 3 போ் மீது வழக்கு

DIN

ஏா்வாடி அருகே இரு தரப்பினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலை அடுத்து இருதரப்பைச் சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

ஏா்வாடி அருகே உள்ள டோனாவூா் கிறிஸ்தவ ஆலயத்தைச் சோ்ந்த சிலா், ஒரு வேனில் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றனராம். அப்பொழுது டோனாவூ ா் வடக்குத்தெருவைச் சோ்ந்த எட்வின் துரை(40) வேனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டாராம்.

இதனைப் பாா்த்த டோனாவூா் நாராயணசுவாமி கோவில் தெருவைச் சோ்ந்த இஸ்ரவேல்(36), வேனுக்கு வழிவிடுமாறு எட்வின் துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதில் இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா்.

இது தொடா்பாக ஏா்வாடி காவல் நிலையத்தில் இஸ்ரவேல் புகாா் செய்தாா். எட்வின்துரை மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இதேபோல எட்வின்துரை கொடுத்த புகாரின் பேரில் இஸ்ரவேல், ஐசக் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT