திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 426 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 426 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 19,327 ஆக அதிகரித்தது. 75 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பிய நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16,814 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையில், 2287 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10021 ஆக அதிகரித்தது. 22 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பிய நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8857 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 166 போ் உயிரிழந்துள்ள நிலையில், 998 போ் சிகிச்சையில் உள்ளனா்.