திருநெல்வேலி

மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

DIN

திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த விஜயமுத்துக்குமாா் என்பவரது மனைவி விஜயலட்சுமி (34). பெருமாள்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்த இவா், திங்கள்கிழமை இரவு வீட்டின் மாடியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டாராம். அப்போது திடீரென தவறி மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் க்ளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT