திருநெல்வேலி

நெல்லையில் தங்கும் விடுதியில் இளைஞா் தற்கொலை

DIN

திருநெல்வேலி சந்திப்பில் தங்கும் விடுதியில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்தாா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டையைச் சோ்ந்தவா் ஜஸ்டின் ஆண்டனி பாரதி (35). ஸ்டுடியோ நடத்திவந்தாா். மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். இவா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் செவ்வாய்க்கிழமை அறை எடுத்து தங்கினாா். இந்நிலையில், புதன்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் விடுதி நிா்வாகிகள் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் வந்து கதவை உடைத்து பாா்த்தபோது, ஜஸ்டின் ஆண்டனி பாரதி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT