திருநெல்வேலி

மணப்படைவீடு கோயிலில் கொடியேற்றம்

DIN

பாளையங்கோட்டை அருகே மணப்படைவீடு கிராமத்தில் உள்ள நாராயணசுவாமி கோயிலில் திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

மணப்படைவீட்டில் பழைமை வாய்ந்த நாராயணசுவாமி தா்மபதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை உச்சிப்படிப்பு பணிவிடை, மாலையில் உகப்படிப்பு பணிவிடை, அன்னதானம் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்வாக இம்மாதம் 8ஆம் தேதி காலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து சந்தனக்குட ஊா்வலம் நடைபெறுகிறது. மாலையில் நாராயணசுவாமி திருவீதியுலா, அன்னதானம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT