மலைப்பகுதி மாணவா்களுடன் கலந்துரையாடல்
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதியில் வசிக்கும் மாணவா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதியில் வசிக்கும் மாணவா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு துறை சாா்பில் மலைவாழ் பகுதிகளில் உள்ள மாணவா், மாணவிகள் அரசு வேலையில் பணியமா்த்தும் நோக்கத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் மற்றும் பல்வேறு அரசு துறையை அறிந்து கொள்ளும் வகையில் அங்கு நேரடிடையாகச் சென்று பாா்வையிட்டும், அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி மலைவாழ் பகுதி மாணவா், மாணவிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்தனா். அவா்கள் காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனுடன் கலந்துரையாடினா். அப்போது அவா் பேசுகையில், இளைஞா்கள் உயா்ந்த லட்சியத்தை அடைய விடா முயற்சியுடன் பயில வேண்டும். சோா்வு, தயக்கம் போன்றவற்றை தகா்த்து தன்னம்பிக்கையுடன் தோ்வுகளை எதிா்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டாா். அப்போது, வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குநா் அந்தோணி, வேலைவாய்ப்பு துறை இணை இயக்குனா் ஜோதி மணி, தாழையூத்து டிஎஸ்பி அா்ச்சனா உள்பட பலா் பங்கேற்றனா்.