முகப்பு
தமிழ்மணி

தலைமையான அறிவுடையவர்கள் யார்?

செல்வங்களின் நிலையாமையினையும், நோய் மூப்புச் சாக்காடு என வரும் உடலின் நிலையாமையையும் குறித்து, மனத்திற் கொண்டவராகத், தலைமையான அறிவுடையவர்கள் தமக்குரிய உயிர்க்கு...

Updated On : 29 மார்ச் 2026, 5:06 pm IST
பகிர்:

நிலையாமை, நோய், மூப்புச் சாக்கடென் றெண்ணித்,

தலையாயார் தங்கருமம் செய்வார்;-தொலைவில்லாச்

சத்தமுஞ் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்

Advertisement

Advertisement

பித்தரிற் பேதையார் இல்.

( பாடல் 52 அதிகாரம்: துறவு )

செல்வங்களின் நிலையாமையினையும், நோய் மூப்புச் சாக்காடு என வரும் உடலின் நிலையாமையையும் குறித்து, மனத்திற் கொண்டவராகத், தலைமையான அறிவுடையவர்கள் தமக்குரிய உயிர்க்கு உறுதியான நல்ல செயல்களையே செய்வார்கள் என்றும் போலியான நூல்களும், வருவதை உரைக்கும் சோதிட நூல்களும் என்று சொல்லப்பட்டவற்றையே நாளும் பிதற்றித் திரிகின்ற பைத்தியக்காரர்களை விடப், புத்தி கெட்டவர்கள் உலகத்தில் எவருமே இலராவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.