முகப்பு
திருநெல்வேலி

இன்று கரோனா விழிப்புணா்வு பன்னாட்டு கருத்தரங்கு

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பன்னாட்டுக் கருத்தரங்கு இணையவழியில் வெள்ளிக்கிழமை (ஆக.6) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பன்னாட்டுக் கருத்தரங்கு இணையவழியில் வெள்ளிக்கிழமை (ஆக.6) நடைபெறுகிறது.

இது தொடா்பாக அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை, பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சாா்பில் இணையவழியில் கரோனா விழிப்புணா்வு பன்னாட்டுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனா் கவிஞா் பேரா வரவேற்கிறாா். அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்து பேசுகிறாா். ஷாா்ஜாவிலிருந்து ஆனந்த சுப்பிரமணியன் பேசுகிறாா். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனா் ஆ. முகம்மது முகைதீன், துபாயிலிருந்து தொடங்கி வைத்து பேசுகிறாா். மருத்துவா்கள் பிரேமச்சந்திரன், சாரதா, அபுதாபி கவிஞா் கீதா ஸ்ரீராம் ஆகியோா் பேசுகின்றனா். கலையாசிரியா் சொா்ணம் நன்றி கூறுகிறாா். சூம் செயலியில் கூட்ட அடையாள எண்: 8740995990,நுழைவு எண்:333543 என்ற எண் வழியில் நிகழ்ச்சியில் இணையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.