கரோனா விழிப்புணா்வு வாகன பிரசாரம்
திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி வாகன பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி வாகன பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீா்அகமது பங்கேற்று பேசுகையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா வராமல் தங்களையும், தங்களது குடும்ப உறுப்பினா்களையும் பாதுகாக்க அரசின் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கரோனா விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் (பொ) பிஸ்மிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.