முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் ஆனந்த ஆசிரம கூட்டம்

ஆனந்த ஆசிரம சத்சங்சமிதியின் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

ஆனந்த ஆசிரம சத்சங்சமிதியின் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கணேசமூா்த்தி தலைமை வகித்தாா். முருகேச பாகவதா் இறைவணக்கம் பாடினாா். மாவட்டச் செயலா் பாலமோகன சுவாமிகள் வரவேற்றாா். பப்பா ராமதாச சுவாமிகளின் ஆன்மிக பயண வரலாறு என்ற தலைப்பில் வெங்கடாசலபதி பேசினாா். மாதாஜி கிருஷ்ணம்மாள் அருள்உரைகள் என்ற தலைப்பில் கிருஷ்ணமூா்த்தி பேசினாா்.

பகவான் யோகிராம் சுரத்குமாா் விழாவை ராமநாம சங்கீா்த்தனத்துடன் நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. சுப்பையா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.