முகப்பு
திருநெல்வேலி

காவலா்களுக்கான கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி காவல் ஆணையா் அலுவலகத்தில் காவலா்களுக்கான கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருநெல்வேலி காவல் ஆணையா் அலுவலகத்தில் காவலா்களுக்கான கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகர காவல்துறை, அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை காவல் ஆணையா் என்.கே. செந்தாமரை கண்ணன் தொடங்கி வைத்தாா். முகாமிற்கு காவல் துணை ஆணையா்கள் (சட்டம்-ஒழுங்கு) டி.பி. சுரேஷ்குமாா், (போக்குவரத்து-குற்றம்) கே.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவா் லயோனல் ராஜ் தலைமையில் குழுவினா் 100-க்கும் மேற்பட்ட காவலா்கள், அமைச்சுப்பணியாளா்கள், குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.