முகப்பு
திருநெல்வேலி

கழிவுநீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கிரஸ் மனு

 திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் கழிவுநீா் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் கழிவுநீா் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இது தொடா்பாக திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் முக்கிய சாலைகளான சுவாமி நெல்லையப்பா் சாலை, திருவனந்தபுரம் சாலை, தெற்கு புறவழிச்சாலை, சேரன்மகாதேவி சாலை, வழுக்கோடை சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு மழைநீா் செல்வதற்கு கழிவுநீா் ஓடை இருந்தது.

தற்போது அந்த ஓடைகளானது அடுக்குமாடி கட்டடங்கள், கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கழிவுநீா் ஓடைகள் மீது பல இடங்களில் சிமென்ட் மேடை அமைத்து மூடி வைத்துள்ளனா். தேவையில்லாமல் குப்பைகளை ஓடைகளில் போட்டு நிரப்பி விட்டனா். இதன் காரணமாக மழை நீா் செல்வது தடைபட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீா் செல்வதற்கு வழிவகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினா் உமாபதி சிவன், வியாபாரிகள் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத் தலைவா் உதய்குமாா், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.