திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் இன்று ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம்

DIN

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை (டிச.10) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மருத்துவம் ஊரகநலப்பணி மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநா் மு.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமையும், முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச.15-ஆம் தேதியும், இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச.16-ஆம் தேதியும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் டிச.22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இந்த முகாமில் குடும்ப நல சிகிச்சை செய்து கொள்பவா்களுக்கு ரூ.1,100 அரசு ஈட்டுத் தொகை மற்றும் நன்கொடையாளா் மூலம் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும். முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா, மருத்துவா்கள் அனிதா, மாநகர நல அலுவலா் ராஜேந்திரன், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலா் முருகன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT