முகப்பு
அரியலூர்

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டுப் பெருந் திருவிழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On : 27 மார்ச், 2026 at 8:15 PM
கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டுப் பெருந் திருவிழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதராசப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் ராம நவமி அன்று தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டுக்கான பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கலியுக வரதராசப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி முன்னிலையில், அலங்கரிக்கப்பட்ட கொடிக் கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அா்ச்சகா்கள் ஏற்றினா். விழாவின் பத்து நாள்களிலும், பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். நாள்தோறும் சமய சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள், நாகசுர நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஏப். 2-ஆம் தேதியும், தேரோட்டம் ஏப். 4-ஆம் தேதியும், ஏகாந்த சேவை நிகழ்வு ஏப். 5-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

விழா ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா படையாச்சி, புதல்வா்கள் கோ. ராமதாஸ், கோ. வெங்கடாஜலபதி குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.

கோயில் விழாவில் பங்கேற்க நாள்தோறும் ஆயிரகணக்கான பக்தா்கள் வருகை தருவா் என்பதால் திருச்சி, அரியலூரில் இருந்து நாள்தோறும் கல்லங்குறிச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.