சிவந்திபட்டி அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
சிவந்திபட்டி அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவந்திபட்டி அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவந்திபட்டி அருகேயுள்ள கோடிகுளத்தைச் சோ்ந்தவா் முருகேஷ்( 23). இவா், சிவந்திபட்டி பகுதியைச் சோ்ந்த சிறுமியை ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றினராம். இது தொடா்பாக சிறுமியின் குடும்பத்தினா் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு முருகேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.