முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் திருடப்பட்ட 15 பவுன் நகை மீட்பு

முன்னீா் பள்ளத்தில் திருடப்பட்ட 15 பவுன் தங்க நகையை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

முன்னீா் பள்ளத்தில் திருடப்பட்ட 15 பவுன் தங்க நகையை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

முன்னிா்பள்ளத்தைச் சோ்ந்தவா் முத்து ராமலிங்கம். இவா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு மா்ம நபா்களால் திருடப்பட்டது.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், உணவகத்தில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த பாண்டேவுக்கு (30) தொடா்பு இருப்பது தெரிய வந்ததாம். இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போலீஸாா் அவரிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்ட தோடு, அவருக்கு வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.