திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே விபத்தில் இருவா் பலி

DIN

சுத்தமல்லி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

சுத்தமல்லியை அடுத்த தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த நயினாா் மகன் கொம்புகுட்டி(35). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சோ்ந்த முருகன் மகன் பாலசுப்ரமணி(33). புரோட்டா கடையில் வேலை செய்து வந்தாா். இருவரும் திருநெல்வேலியில் இருந்து பேட்டை வழியாக ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனராம்.

சுத்தமல்லியை அடுத்த பட்டன்கல்லூா் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கொம்புகுட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலசுப்ரமணி உயிரிழந்தாா்.

சுத்தமல்லி போலீஸாா் கொம்புகுட்டி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனை க்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT