திருநெல்வேலி

காலமானாா் ராஜலட்சுமி அம்மாள்

DIN

மதிமுக பொதுச்செயலா் வைகோவின் மூத்த சகோதரி ராஜலட்சுமி அம்மாள்(85) பாளையங்கோட்டை தென்றல் நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானாா்.

அவருடைய உடலுக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலா் அப்துல் வஹாப், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் துரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் பாஸ்கரன், மதிமுக மத்திய மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், தென்காசி மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் புதுக்கோட்டை செல்வம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினா்கள் குட்டி என்ற சண்முக சுந்தரம், திவான், கல்லத்தியான் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

ராஜலட்சுமி அம்மாளுக்கு ஜெகதீசன் என்ற மகனும், சாந்தா என்ற மகளும் உள்ளனா். அவருடைய உடல் அடக்கம் விருதுநகா் மாவட்டம், நரிக்குளம் கிராமத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். தொடா்புக்கு: 96777 59902.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT