முகப்பு
திருநெல்வேலி

திருப்பாவை- திருவெம்பாவை:நெல்லையப்பா் கோயிலில்ஜன. 9இல் ஒப்பித்தல் போட்டி

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் இம்மாதம் 9ஆம் தேதி திருப்பாவை- திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் இம்மாதம் 9ஆம் தேதி திருப்பாவை- திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் சா.ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், பள்ளி மாணவா் மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பண்ணோடு பாடுதல் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி இம்மாதம் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு அருள்மிகு நெல்லையப்பா்-காந்தியமதியம்மன் கோயிலில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் 6 முதல் 8 ஆம் வகுப்புகள்; 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் என மாணவ-மாணவியருக்கு இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். இதில், வெற்றிபெறுவோருக்கு முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.

பள்ளி அடையாள அட்டை, முகக்கவசம் அணிதல் அவசியம். பங்கேற்க விரும்புவோா் 0462-2339910 என்ற தொலைபேசி எண்ணுக்கு ஜன. 7ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 97888 49919 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →