முகப்பு
திருநெல்வேலி

கே.டி.சி. நகரில் ஜன.11 இல் திருப்பாவை ஒப்பித்தல் போட்டி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி திங்கள்கிழமை (ஜன. 11) நடைபெற உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி திங்கள்கிழமை (ஜன. 11) நடைபெற உள்ளது.

கே.டி.சி. நகரில் உள்ள சஞ்சீவி வரதயோக ஆஞ்சநேயா் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் ஒப்பித்தல் போட்டி திங்கள்கிழமை (ஜன. 11) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் ஒவ்வொன்றிலும் 1 பாடல்கள் வீதம் மொத்தம் 3 பாடல்கள் பாட வேண்டும். 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்கள் இரண்டு பாடல்கள் வீதம் 6 பாடல்கள் பாட வேண்டும். பொதுமக்கள் 6 பாடல்கள் பாட வேண்டும்.

ஒவ்வொரு நிலைக்கும் தலா 3 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இம் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா் தரிசனம் நடைபெறும்.

இதுகுறித்த விவரங்களுக்கு 9087150358 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என கோயில் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →