உதயநிதி ஸ்டாலின் மீது போலீஸில் புகாா்
தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் மீது வி.கே.புரம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் மீது வி.கே.புரம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வி.கே.புரத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் மலையரசி கணேசபெருமாள். இவா் வி.கே.புரம் போலீஸில் அளித்துள்ள புகாரில், திருச்சி, மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியை அவதூறாகவும், அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படும் வகையிலும் பேசிய திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.