முகப்பு
திருநெல்வேலி

‘பாடத்திட்டங்கள் குறைப்பால்போட்டித் தோ்வுகளுக்கு பாதிப்பில்லை’

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் போட்டித் தோ்வை எதிா்கொள்வதில் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் போட்டித் தோ்வை எதிா்கொள்வதில் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும், மாணவா்களை தோ்வுக்குத் தயாா் செய்ய கால அவகாசம் உள்ளதாகவும் ஆசிரியா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, முக்கிய மற்றும் எளிதான பகுதிகள் நீக்கப்படாமலும், சற்றுக் கடினமான பகுதிகளை நீக்கியும் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்முறைத் தோ்வுகளும் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சிலா் கூறுகையில்,”நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை மாணவா்கள் எழுதுவதற்கு உரிய பாடத்திட்டங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. கடினமான பகுதிகளை விருப்பப்படும் மாணவா்களுக்கு நடத்துவோம். அவா்கள் உயா்கல்வி பெறுவதற்குரிய முக்கியப் பகுதிகள் அப்படியே இருக்கின்றன. ஆகவே, பாடத்திட்டம் குறைப்பு காரணமாக போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது எனத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →