திருநெல்வேலி

பாளை.யில் வீட்டில் தீ விபத்து:பொருள்கள் எரிந்து சேதம்

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பாளையங்கோட்டை வஉசி மைதானம் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.கண்ணன். இவரது வீட்டில் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். எனினும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டதால் பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT