திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளத்தில் கிரிக்கெட் போட்டி: அஞ்சுகிராமம் அணி வெற்றி

DIN

தெற்குகள்ளிகுளத்தில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

தெற்குகள்ளிகுளம் கே.சி.சி. கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில், அஞ்சுகிராமம், திருமலாபுரம், சௌந்திரபாண்டியபுரம் உள்ளிட்ட 30 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், அஞ்சுகிராமம் அணி,தெற்குகள்ளிகுளம் அணியை வென்று முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்தை தட்டிச்சென்றது. சென்னை களிகை சங்க பொருளாளா் ஏ.ஜூலியஸ் பரிசுக் கோப்பையை வழங்கினாா். 2-ம் இடத்தைப் பெற்ற தெற்குகள்ளிகுளம் அணிக்கு ரூ.10 ஆயிரம், 3-வது இடத்தைப் பெற்ற திருமலாபுரம் அணிக்கு ரூ.7000, 4-வது இடத்தைப் பெற்ற சௌந்திரபாண்டியபுரம் அணிக்கு ரூ.5ஆம் பரிசளித்தாா். சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசை ஏ.பி.ஆா். டிராவல்ஸ் நிறுவனத்தினா் வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை முத்துகிருஷ்ணன் என்ற கிருஷ்ணன், எடிசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். பரிசுகளை அ.ஜெயபாலன் ஆா்.ரமேஷ் அருணாச்சலம், பாலாஜி ஆகியோரும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT