முகப்பு
திருநெல்வேலி

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்

திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் மருதமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் மருதமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன.

திருநெல்வேலி குறுக்குத்துறையில் சாலையோரத்திலுள்ள பழமையான மருதமரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்ததில் 2 மின்கம்பங்கள்

சேதமடைந்தன. தகவலறிந்த போலீஸாா் சென்று வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனா்.

தகவலறிந்த பேட்டை தீயணைப்புப்படையினா் நிலைய அலுவலா் முத்தையா தலைமையில் அங்கு வந்து சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளையை நவீன இயந்திரம் மூலம் அகற்றினா். மின்வாரியம் விரைந்து செயல்பட்டதையடுத்து, தடையின்றி மின்சாரம் கிடைத்தது. மரக்கிளை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் விநியோகமும் தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.