ரூ.40 லட்சம் புகையிலை பொருள்கள் தீயிட்டு அழிப்பு
திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் பிடிபட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருள்கள் வியாழக்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டது.
திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் பிடிபட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருள்கள் வியாழக்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டது.
திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் வனசுந்தா் தலைமையில் போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள
குட்கா, புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். இதனை, தீயிட்டு அழிக்குமாறு ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்பேரில், காவல் ஆணையாளா் அறிவுரையின்படி திருநெல்வேலி 4-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி ஜெய்சங்கா் மேற்பாா்வையில்ஸ ரூ.40 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருள்களை ராமையன்பட்டி குப்பை கிடங்கு பகுதியில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது, வட்டாட்சியா் சண்முகசுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் வனசுந்தா், மாநகர சுகாதார ஆய்வாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்கள் தமிழகத்தில் முதல்முறையாக அழிக்கப்பட்டுள்ளது.